Saturday, May 14, 2011

மக்களின் தேவைகள் அனைத்தையும் உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன் என்று தென்காசி தொகுதியில் வெற்றி பெற்ற சமக வேட்பாளர் சரத்குமார் தெரிவித்தார்.

தென்காசி சட்டசபை தொகுதியில் சமக வேட்பாளராக அக்கட்சியின் நிறுவனர் சரத்குமார் போட்டியிட்டு 23 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார்,

தென்காசி தொகுதி மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் அதிமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இதற்காக பாடுபட்ட கட்சி தோழர்களுக்கும், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மற்றும் கூட்டணி கட்சியினருக்கும், வாக்காளர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த வெற்றி ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி. மக்கள் தெளிவான தீர்ப்பு வழங்கியுள்ளனர். அதிமுக ஆட்சி நிச்சயம் மக்கள் நலன் காக்கும் அரசாக இருக்கும். தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மறக்காமல் பாடுபடுவேன். தென்காசி தொகுதி மக்களின் தேவைகள் அனைத்தையும் உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...